Monday, 14 November 2016

புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம் - தொடக்க விழா

புதுச்சேரியில் உள்ள சிற்றிதழாளர்கள் நலனுக்காக அமைப்பு ஒன்றினைத் தொடங்கினோம். முதலில் புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம் எனப் பெயரிட்டோம். அப்பெயரில் அமைப்பு இருக்கிறது என்பதால் புதுச்சேரி சிறுபத்திரிக்கையாளர் சங்கம் என்கிற பெயரிட்டோம். அதுவும் ஏற்கேனவே தொடங்கப்பட்டு விட்டது என பதிவுத் துறையில் சொல்லப்பட்ட நிலையில் மிகவும் ஆழமாக பல நண்பர்களுடன் ஆலோசித்து "புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம்" எனப்பெயரிட்டோம். பதிவும் கிடைத்து விட்டது.
"புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம்" தொடக்க விழா நாளை மாலை 6 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பய்யர் வீதியில் உள்ள செகா ஆர்ட் கேலரியில் நடைபெற உள்ளது. இயக்கத்தினை திருமிகு.க.இலட்சுமிநாராயணன் - சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைக்க உள்ளார்கள். பத்திரிக்கையாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாருமாகிய தோழர்.மயிலை பாலு சிறப்புரை ஆற்றிட உள்ளார்.
நண்பர்கள் இதனையே அழைப்பாகக் கருதி அவசியம் பங்கேற்க வேண்டுகிறேன் -- லெனின்பாரதி செயலாளர் புதுச்சேரி சிற்றிதழ் இயக்கம் --

Thursday, 10 November 2016

கவிதை வானில் 150வது கவியரங்கம்

வாங்க கலந்து கொள்ளுங்க .. கலக்குங்க ...
கிராமிய மணம் வீசும் விளையாட்டுக்களை வேடிக்கை பார்ப்பது எவ்வளவு இன்பமானது .. அதிலும் அதில் கலந்து கொள்வது என்றால் ... இதோஒரு பொன்னான வாய்ப்பு ...
கவிதைவானில் கவிமன்றம் தனது 150-வது கவியரங்கத்தை முன்னிட்டு வருகிற 12.11.2016 காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ல ஆந்திர மஹா சபாவில் போட்டிகளை நடத்த உள்ளது. என்னென்ன போட்டிகள் தெரியுமா ?
ஓவியம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நினைவாற்றல், மெதுவாக நடத்தல், சுழல் நாற்காலி, பல்லாங்க்குழி, ஏழாங்கல், தண்ணீர் நிரப்புதல், தாயக்கட்டம், குளமா கரையா, தனிப்பாட்டு, பாட்டுக்குப் பாட்டு, தனி நடிப்பு, பந்து கடத்துதல், பலூன் ஊதுதல், சத்துணவு தயாரித்தல், வேகமாக நட்த்தல், கண்ணாமூச்சு, ஆரத்தி தட்டு என்று ஏகப்பட்ட போட்டிகள் .. நுழைவுக் கட்டணம் ரூ.100/- என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு : 9994362336 / 9842577822 / 9894756506 / 8056594136 .
என்ன அவங்க ரெடி .. நீங்க ரெடியா .. ?