Thursday, 28 January 2016

செல்வி கிருத்திகாவுக்கு பாராட்டு - 30.01.2016 மாலை 630 மணி

செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன்
      மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கடந்த ஆண்டு “பேஸ்புக்”- நிறுவனத்துடன் இணைந்து “100 சாதனைப் பெண்களை தேர்வு செய்யும்” திட்டத்தை கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று தொடங்கியது. பல்வேறு துறைகளில் இந்திய அளவில் வியத்தகு சாதனைகள் நிகழ்த்திய 100 சாதனைப் பெண்களை கண்டெடுத்து பாராட்டுவது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.  முதல் கட்டமாக இத்தகைய பெருமைமிகு சாதனைகளை பல்வேறு துறைகளில் புரிந்து வரும் பெண்களை முன்மொழியும் பணி 15.07.2015 அன்று தொடங்கி 30.09.2015 அன்று நிறைவு பெற்றது. ஆயிரக்கணக்கில் முன்மொழிவுகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் பெறப்பட்டது.

      இரண்டாம் கட்டமாக அவ்வாறு பெறப்பட்ட முன்மொழிவுகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு அதிலிருந்து 200 பெண்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பெண்களில் 100 பெண்களை இணையம் மூலமாக வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்யும் முறை நவம்பர் 7, 2015 அன்று தொடங்கியது. வாக்கெடுப்பு நிறைவு பெற்ற நிலையில் தேர்வு செய்யப்பட்ட 100 பெண்களின் இறுதிப் பட்டியலை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கடந்த 01.01.2016 அன்று அறிவித்தது.

      செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரனுக்கு கலைத்துறையில் சிறப்பான சேவை செய்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாச்சார மையத்தின் செரிமோனியல் அரங்கில் பாரதக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு.பிரணாப் முகர்ஜி அவர்கள் 22.01.2016 அன்று வழங்கினார்.
      செல்வி.கிருத்திகாவின் பரதநாட்டியப் பயிற்சி புதுச்சேரி பால் பவனில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, திரு.கிருஷ்ணன், திருமதி.சண்முகசுந்தரி,  ஆகியோரிடம் பரதம் கற்றார். திருமதி.ஜெயஸ்ரீ நாராயணன் அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு ஒரு மாணவியாக இன்றும் பரதம் கற்று வருகிறார். நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி, பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கனிணியில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகத்தில் பரதக் கலையில் ஆய்வியல் நிறைஞர் (M.PHIL) பட்டப் படிப்பினை முடித்துள்ளார். கனிணிப் பிரிவில் பாண்டிச்சேரி எஞ்ஜினியரிங்க் கல்லூரியில் (P.E.C) பகுதி நேர ஆய்வு மாணவியாக படித்து வருகிறார்.
      சைனாவில் நடைபெற்ற கலாச்சார பரிமாற்ற விழாவில் பங்கேற்று பிஜிங்க், ஷங்காய், நாஞ்ஜிங்க் ஆகிய இடங்களில் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். வியட்நாம் நாட்டில் ஆகிய இடங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சகள் நடத்தியுள்ளார். சமீபத்தில் அந்தமானின் போர்ட்பிளேயரில் நடைபெற்ற தீவுச் சுற்றுலா திருவிழாவில் (ISLAND TOURISM FESTIVAL – I.T.F) பங்கேற்று அந்தமான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தேசிய விருதுகளையும், சமூக, கலாச்சார அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் திருக்குறளின் பெருமையினை உலகுக்கு உணர்த்துவதற்காக மாபெரும் கின்னஸ் சாதனை நிகழ்வினை விரைவில் நடத்த உள்ளார்.

            செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன் புதுச்சேரி தவளக்குப்பம் ராஜீவ்காந்தி       அரசு               கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினித் துறையில் உதவிப்                          


பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.     

Monday, 25 January 2016

>>>>>>>>>நலமாக வாழ்ந்திடு..
       நாட்டினைக் காத்திடு..!<<<<<<<<<<<


சிந்தனை செய்திடு  சிகரத்தை தொட்டிடு !
         செல்வத்தைப் பெற்றிடு  செருக்கினை விட்டிடு !
சந்தண மனமிடு   சரித்திர புகழெடு !
          சாதனை தொடர்ந்திடு  சகலமும் வைத்திடு !


சந்ததி வளர்த்திடு  சமத்துவம் போற்றிடு !
          சத்தியம் காத்திடு  சாயாமல் நின்றிடு !
 இந்தியன் என்றிடு  இதயத்தில் வைத்திடு !
         இல்லாமை மாற்றிடு  இலக்கைநீ எட்டிடு !

ஒற்றுமை விதைத்திடு  உன்பணி செய்திடு !
                     ஓடிநீ உழைத்திடு    ஊருக்குள் உயர்ந்திடு!
ஊற்றாக உதவிடு  உழைப்பாலே செலவிடு !
         ஊரோடு சூழ்ந்திடு  உணர்வுக்கு வித்திடு !


வேற்றுமை களைந்திடு  வேதனை போக்கிடு !
          வேர்வையை சிந்திடு  விளைச்சலை கண்டிடு !
நாற்றாக வளர்ந்திடு  நற்கனி தந்திடு !
         நலமாக வாழ்ந்திடு  நாட்டினைக் காத்திடு !

                                -கண்ணன்சேகர்.

   ***********இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்**************
--
P.Kannansekar,
13,Varada reddi street,
TIMIRI-632512,
Vellore dt, Tamil nadu, INDIA
cell:9698890108.

தியாகிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் ..
இன்று நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு காற்றுத் துளியிலும் அவர்களின் இரத்தம் கலந்திருக்கிறது ..
இந்தியக் குடியரசைப் பேணிக் காப்போம் .. அனைவருக்கும் இனிய குடியரசுத் தின வாழ்த்துக்கள் ..

26.01.2016 பரத நாட்டிய நிகழ்ச்சி ..

வணக்கம்.
நாளை 26.01.2016 செவ்வாய்க் கிழமை மாலை 0700 மணி முதல்
புதுச்சேரி - கடற்கரைச் சாலை -



காந்தி சிலை
எதிரில்
அம்மா சமூக சேவா மைய மாணவிகளின்
பரத நாட்டிய நிகழ்ச்சி
அவசியம் வாங்க ...

Tuesday, 19 January 2016

இலக்கிய விவாத அரங்கு - மு.எ..க.ச புதுச்சேரி 26.01.2016

 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
இலாசுப்பேட்டை - புதுச்சேரி 605008.


இலக்கிய விவாத அரங்கு

தேதி : 26.01.2016 – செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி
இடம் : விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார மையம்,
         கிழக்கு கடற்கரைச்சாலை, இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008.
தலைமை :
திரு.ஆர்.எம்.ராம்ஜி
நூல் அறிமுகம்
முனைவர்.த.பரசுராமனின்
“மொழிகள் அறிந்ததும் , அறியாததும்“
அறிமுக உரை :
புதுச்சேரி லெனின்பாரதி
திரு.இரா.ஞானசேகரன்
(முனைவர் பட்ட ஆய்வாளர் – புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு மையம்,)

சிறப்புரை :
“வலைத்தளங்களில் சமூகப் பொறுப்பு”
திருமதி.என்.விமலா
(உதவிப் பேராசிரியர் – காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி)

அனைவரும் வருக
-    தொடர்புக்கு :புதுச்சேரி லெனின்பாரதி  
-    கைபேசி : 9443601439
ரு காலத்தில் கடன் வாங்குவது குற்றமாகக் கருதப்பட்டது. அதனால்தானோ என்னவோ கம்பர் யுத்த காண்டத்தில் இராவணனின் நிலையைக் கடன்பட்டார் நெஞ்சத்திற்கு ஒப்பிட்டார். ஆனால், இன்று உள்ளூர் கூட்டுறவு வங்கியிலிருந்து உலக வங்கி வரை கடன் வாங்குதல் என்பது பெட்டிக் கடைக்காரர் முதல் பெருநாட்டு அரசுகள் வரை எல்லாருக்கும் இயல்பான தேவையாகி விட்டது. இந்நிலையில் மொழிகள் மட்டும் சும்மா இருக்குமா ? அவையும் ஒன்றிடமிருந்து மற்றொன்று கடன் வாங்குகிறது. ஆனால், மற்ற கடன்களுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டுமொழிகள் அறிந்ததும் அறியாததும் நூலிலிருந்து ….




 

மகமதியர்கள் குறித்து பாரதி

மகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று.
அவர்கள் இங்கே இன்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களல்ல.
இந்நாடு இந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு
அவ்வளவு மகமதியர்களுக்கும் சொந்தம்
- 06.10.1906-ல் இந்தியா இதழில் மகமதிய பிரதிநித்களின் கூட்டம் என்ற தலைப்பில் பாரதி எழுதிய கட்டுரையில் இருந்து)
தகவல் உதவி : கலை இலக்கிய பெருமன்றம், புதுச்சேரி

கலை இலக்கிய பெருமன்ற இலக்கிய விழா - 23.01.2016

புதுவைச் செய்திகள்
நடக்க இருப்பவை
புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் நடத்தும்
பொதுவுடைமை கவிஞர்கள் விழா
பாரதி, ஜீவா விழா
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்த நாள் விழா
23.01.2016 சனிக்கிழமை மாலை 5.30 மணி
இடம் : ஓட்டல் ஜெயராம் (3ஆவது தளம்) காமராஜ் சாலை, புதுச்சேரி
பங்கேற்கும் கவிஞர்கள்
முனைவர்.அ.இலட்சுமிதத்தை, அமலோற்பவமேரி, இரா.ஜென்னி, ச.திரிபுரசுந்தரி, க.ரஞ்சிதா, இரா.அருளாட்சி, ச.ஆ.இலட்சியமதியழகி,
உரையரங்கம் ; சிறப்புரை
" பாரதியும் பாரதிதாசனும்"
கவிக்கோ.அப்துல் ரகுமான்,
"ஜீவாவும் புரட்சிக்கவிஞரும்"
தோழர்.சி.மகேந்திரன்
(சி.பி.ஐ. தேசியக்குழு உறுப்பினர், தாமரை இதழ் ஆசிரியர்)

நலக்கும்மி நானூறு நூலாய்வுக் கூட்டம் 23.01.2016

புதுவைச் செய்திகள்...
நடக்க இருப்பவை ..
புதிய உறவு மாத இதழ் நடத்தும்
கலைமாமணி கோனேரி பா.இராமசாமி அவர்கள் எழுதிய "நலக்கும்மி நானூறு" நூலாய்வு
மற்றும்
நாட்டுப்புறக் கலையில் "கலைமாமணி" விருது பெற்றோர்க்கு பாராட்டு விழா
23.01.2016 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம் புதுவைத் தமிழ்ச் சங்கம்
பங்கேற்போர் :
இலக்கியமாமணி மு.பாலசுப்பிரமணியன், கலைமாமணி கல்லாடன், புலவர். சிவ.இளங்கோவன், முனைவர் பூங்குழலி பெருமாள், பாவலர்.சு.சண்முகசுந்தரம், கவிஞர்.மு.ம.சச்சிதனாந்தம்,
நிகழ்ச்சி தொகுப்புரை : கவிஞர்.அமலோற்பவ மேரி ...
செல்வி கிருத்திகாவின் பரதநாட்டிய அபிநயங்கள் ..
அந்தமானில் ...மேலும் புகைப்படங்கள்














Sunday, 17 January 2016

புதுவைத் திருக்குறள் மன்ற நான்காமாண்டுத் தொடக்க விழா

புதுவைத் திருக்குறள் மன்ற நான்காமாண்டுத் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் திருநாள் சிறப்புப் பொழிவு நிகழ்வு புதுச்சேரி சித்தன்குடி செயராம் திருமண மண்டபத்தில் 17.01.2016 மாலை நடைபெற்றது. முனைவர்.கலியன்.எதிராசன் (தலைவர் - புதிமம்_ அனைவரையும் வரவேற்றார். முனைவர்.அ.அறிவுநம்பி (செயலர் - புதிமம்) அறிமுகவுரை நிகழ்த்தினார். அரிமா.செ.செல்வகாந்தி விருந்தினரைச் சிறப்பித்தார். நான்காமாண்டுத் தொடக்கவுரையாற்றினார்













திருமிகு.இரா.ச.குழந்தைவேலனார் (தமிழ்ப்பேராசிரியர்). சன்னியாசிக்குப்பம் திரு.பாலக்ரிஷ்ணா ரெட்டியார் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் சிறப்புப் பொழிவினை முனைவர்.சரசுவதி இராமநாதன் (தமிழ்ப் பேராசிரியர், பள்ளத்தூர்) நிகழ்த்தினார். விழாவில் திருக்குறளைப் பரப்பும் பணிகளை மேற்கொண்டு வரும் திரு.எம்.எஸ்.வின்சென்ட் (அமெரிக்கா), செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன், திரு.பி.உதயகுமார் (செய்தியாசிரியர் - ராகவா தொலைக்காட்சி), திரு.சீனு.தாமோதரன், செல்வன்.மு.பிரகதீசுவரன், அரசு உயர்நிலைப்பள்ளி - உறுவையாறு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்